உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

Published On 2023-09-28 13:33 IST   |   Update On 2023-09-28 13:33:00 IST
  • தோல் தொழிற்சாலையில் பணியின்போது பரிதாபம்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ஐ.ஓ.பி.நகர் ராகவேந் திராகோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் காந்தி (வயது 45). தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று சுரேஷ்காந்தி வழக்கம் போல பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது எந்திரத்தை இயக்கினார். திடீரென அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது. அதில் இருந்த மின் சாரம் பாய்ந்து சுரேஷ் காந்தி தூக்கி வீசப்பட்டார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது, சுரேஷ்காந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News