உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து இறந்த இளம்பெண்.

பாணாவரம் அருகே பாம்பு கடித்து பெண் சாவு

Published On 2022-06-05 16:04 IST   |   Update On 2022-06-05 16:04:00 IST
  • ஏற்கனவே ஒரு மகள் இறந்து விட்டார்.
  • பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

நெமிலி:

பாணாவரம் அடுத்த மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி ராணி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் ஏற்கனவே ஒரு மகள் இறந்து விட்டார். இந்த நிலையில் இன்னொரு மகளான நேத்ரா (வயது 25) என்பவரை பாம்பு கடித்துள்ளது.

சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நேத்ராவுக்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News