உள்ளூர் செய்திகள்

பைக் மீது வேன் மோதி ஒருவர் பலி

Published On 2023-10-25 08:01 GMT   |   Update On 2023-10-25 08:01 GMT
  • ஒருவர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

சோளிங்கர்:

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). இவர் பைக்கில் துரை (54) என்பவரை ஏற்றிக்கொண்டு, கொடைக்கல் கிராமத்திலி ருந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன், பைக் மீது மோதியது. இதில் முத்துக் குமார், துரை ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவம னைக்கு எடுத்துச்சென்ற போது முத்துக்குமார் வழியி லேயே இறந்துவிட்டார். துரைக்கு கிச்சை அளித்து அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News