உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பிளாஸ்டிக்கை தவிர்க்க மாற்றுப்பொருளை பயன்படுத்த வேண்டும்

Published On 2022-06-25 09:24 GMT   |   Update On 2022-06-25 09:24 GMT
  • கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வேண்டுகோள்
  • பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி

ராணிப்பேட்டை :

ராணிப்பேட்டை எல்.எப்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கெங்காதர முதலியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம், என் பெருமை என்ற தலைப்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த் திட மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்துவதைதவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் , என்றார். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவ -மாணவிக ளின் கண்காட்சிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் மாணவ- மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஏசுராஜ், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி முதல்வர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News