உள்ளூர் செய்திகள்

பாணாவரம் அரசு பள்ளியில் சுகாதாரமற்ற கழிப்பறை

Published On 2022-06-27 16:06 IST   |   Update On 2022-06-27 16:06:00 IST
  • துர்நாற்றம் வீசி வருகிறது
  • பெற்றோர்கள் புகார்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மேலும் புதிய மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருவதால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பபோதுமான அளவிற்கு கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போது மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் முறை யாகபராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மாணவர்கள் கழிப்பறை செல்லவே சிரமப்பட்டு வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கழிப்பறைகள் சுகா த தாரமற்ற முறையில் உள்ளதால் மாணவர்களின் ஆரோக்கியம் க் கேள்விக்குறியாக இருப்பதாகவும், தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர் கழிவறையை சுத்தம் செய்து பராமரிக்க சம்பந்தப் 31 பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களின் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News