உள்ளூர் செய்திகள்
- ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை தாரர்கள் விழா குழுவினர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.