வாலாஜா வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோண திருவிழா
- சுதர்சன யாகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜா வெங்கட்ரமண பாகவதர் தெருவில் 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி பெருந் தேவி தாயார் சமேத வரத ராஜ பெருமாள் கோயில் உள்ளது . சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் இந்த கோயிலுக்கு நேரில் வந்து சில நாட்கள் தங்கி, பல கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை பாடியுள்ளார்.
அவரின் பிரதான சீடர் வாலாஜாபேட்டை வெங்கட்ராமன் பாகவதரும் இந்த பெருமாள் மீது பாடல்களை இயற்றியுள்ளார் . இதற்கிடையே , இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சுதர்சன யாகம் நடை பெறும் .
அதன்படி 20-ம் ஆண்டு தை திருவோணத் திருவி ழாவை முன்னிட்டு மகா சுதர்சனம் யாகம் கோயில் மகாமண்டபத்தில் நேற்று நடந்தது . காலை பகவத் திருவாதனம் , வேதாரண்யம் பிரபந்த கோஷ்டியினரின் தமிழ் வேதம் கலச ஸ்தாபனம் நடந்தது . பின்னர் பரிவார யாகம் மற்றும் மகா சுதர்சன யாகம் நடைபெற்றது . தொடர்ந்து கும்பம் புறப்பாடு நடந்தது .
மேலும் , மூலவர் மற்றும் அலங்கரிக்கப்பட்ட உற்சவ ருக்கு மஹா தீபாராதனை நடந்தது . இதில் , ஏராளமான பக் தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர் . முன்னதாக மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு பால் , தயிர் , தேன் குங்கு மம் , மஞ்சள்பொடி அபி ஷேக பொடி , உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடந்தது .