உள்ளூர் செய்திகள்

குட்டையில் விழுந்து தொழிலாளி பலி

Published On 2022-11-01 09:18 GMT   |   Update On 2022-11-01 09:18 GMT
  • மயக்கம் ஏற்பட்டதால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

வாலாஜா:

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் சேர்ந்தவர் பாலாஜி (35) இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றது.

பாலாஜி வாலாஜா பேட்டையில் அணைக்கட்டு ரோட்டில் உள்ள சிவில் சப்ளை குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று சக்கரை மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு அருகில் இருக்கும் மேம்பாலம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள குட்டை அருகே சென்ற போது திடீரென மயக்கம் ஏற்பட்டதில் அந்த குட்டையில் விழுந்து மூச்சு திணறி இறந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News