உள்ளூர் செய்திகள்

தவறிவிழுந்து தொழிலாளி சாவு

Published On 2023-10-03 13:40 IST   |   Update On 2023-10-03 13:40:00 IST
  • வடமாநிலத்தை சேர்ந்தவர்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

ராணிப்பேட்டை:

சோளிங்கர் தாலுகா பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பெங்க ளூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலை பணிக்கு தேவைப் படும் கற்களை உருவாக்கும் பணியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தன்று இரவு தள்ளு வண்டியில் பிஜேந்திரசிங்சர்தார் (வயது 33) உள்பட 3 பேர் கல்லை ஏற்றிக்கொண்டு வண்டியை தள்ளி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பிஜேந்திரசிங் தடுமாறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சக தொழிலாளர்கள் வேன் மூலம் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News