உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கியவர் கைது

Published On 2023-08-19 13:46 IST   |   Update On 2023-08-19 13:46:00 IST
  • குடி போதையில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஆலங்காயம்:

வாணியம்பாடி அடுத்த பஷிராபாத் பகுதியை சேர்ந்தவர் ஆசிம் (வயது 28). இவர் குடி போதையில் அதே பகுதியில் ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து 38 வயது பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் கூச்சலிடவே அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினார்.

மேலும் ஆசீமை வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசீமை கைது செய்தனர்.

Tags:    

Similar News