உள்ளூர் செய்திகள்

வாழைத்தார் ஆட்டோ கவிழ்ந்த காட்சி.

வாழைத்தார் ஏற்றி வந்த லோடு ஆட்டோ கவிழ்ந்தது

Published On 2023-09-14 15:46 IST   |   Update On 2023-09-14 15:46:00 IST
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது
  • போலீசார் விபத்து குறித்து விசாரணை

காவேரிப்பாக்கம்:

ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் இருந்து வாழைப்பழத்தார்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ திண்டிவனம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சேந்தமங்கலம் அருகே வரும்போது எதிரே வந்த பால் வேன் மீது லோடு ஆட்டோ உரசியது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்த வாழைப்பழத்தார்கள் சாலையில் விழுந்து நசுங்கியது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோடு ஆட்டோவை அப்புறப்ப டுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News