உள்ளூர் செய்திகள்
- தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஏஜர் (வயது 20). இவர் சென்னை ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று ஏஜரும், அவரது நண்பர் மோகன்(20) என்பவரும் மோட்டார் பைக்கில் சோளிங்கர் நோக்கி சென்றனர். பைக்கை ஏஜர் ஓட்டி சென்றார்.
வாலாஜா அடுத்த சித்தாத்தூரில் தனியார் கல்லூரி அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ஏஜர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம டைந்த மோகன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் ஏஜர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.