உள்ளூர் செய்திகள்
- பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் அடுத்த சீனிவாசன் பேட்டையில் அம்பேத்கர் புது தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹேமகுமார் (வயது 18) தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
ஹேமகுமாருக்கும், பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஹேமகுமார் தனது அறையில் தூங்க சென்றார்.
நேற்று வேலைக்கு செல்வதற்காக ஹேமகு மாரை அவரது உறவினர் எழுப்ப சென்றபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹேமகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.