உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-10-30 13:48 IST   |   Update On 2022-10-30 13:48:00 IST
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
  • போலீசார் விசாரணை

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த சென்ன சமுத்திரம் டோல்கேட் நகரை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகன் கார்த்தி (வயது 22). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. மேலும் குடிப்பழக்கத்தால் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து கார்த்தியின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்தி வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்தியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News