உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-12-21 10:22 GMT   |   Update On 2022-12-21 10:22 GMT
  • கலெக்டர் உத்தரவு
  • ஜெயிலில் அடைப்பு

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த வேலூர் பேட்டை அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 23).

இவர் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக, அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் விக்கி என்கிற விக்னேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News