உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

Published On 2023-07-13 14:56 IST   |   Update On 2023-07-13 14:56:00 IST
  • பணத்தையும் அள்ளி சென்றனர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ராணிப்பேட்டை:

வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராம சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

மதுபான கடையில் பணிபுரியும் விற்பனை யாளர் அய்யப்பன் என்பவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

மேலும் கடையில் இருந்த கல்லாப்பெட்டி மற்றும் விலை உயர்ந்த மது பாட்டில்கள், வெளியே பொறுத்திருந்த சிசிடிவி கேமரா ஆகியவற்றை திருடி சென்றனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மதுபான கடை மேலாளர் நரசிம்மனிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து வாலாஜா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News