உள்ளூர் செய்திகள்

சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-11-16 09:18 GMT   |   Update On 2023-11-16 09:18 GMT
  • வாலாஜா அரசு மருத்து வமனையில் பிரேத பரிசோதனை
  • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை: 

வாலாஜா சுவர்ண செட்டி தெருவை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 45) இவர் வாலாஜாவில் சூப்பர் மார்க்கெட் உள்பட பல்வேறு தொழில்கள், வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அமர்நாத் தனது கடையில் உள்ள அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் அமர்நாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட அமர்நாத்திற்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர்.

Tags:    

Similar News