தோல் தொழிற்சாலையில் தொழிலாளி திடீர் சாவு
- உறவினருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்
- இவருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் இவரது மகன் கார்த்திக் (36).இவர் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்த பின்னர் தொழிற்சாலை செக்யூரிட்டி அறையில் அமர்ந்து தனது உறவினருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் அங்கே மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன தொழிலாளி கார்த்திக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.