தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு பிரார்த்தனை
- மங்கள சண்டியாகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு நேற்று நவக்கிரக தோஷங்கள் அகல, நிலம், பூமி, வீடுமனை மற்றும் சொத்து தகராறு வழக்குகள் நீங்கிட, தோஷங்கள், திருமணத்தடை அகல, மனஅமைதி பெற்று, மன சோர்வு நீங்கி, திருஷ்டி, செய்வினை அகன்றிட, கணவன் மனைவி ஒற்றுமை பெற, கடன் தொல்லை அகன்றிட, பதவி, படிப்பு, தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் விலகிட வேண்டி மங்கள சண்டியாகம் நடைபெற்றது.
மங்கள சண்டி யாகத்தை முன்னிட்டு காலை கோ பூஜை, கணபதி சங்கல்பம், யாகசாலை பூஜைகள், நவதானியங்கள், பல்வேறு வகையான பூக்கள், பழங்கள், கரும்பு, இனிப்பு வகைகள், பூசணிக்காய் உள்பட பல்வேறு வகையான பொருள்கள் வைத்து நடைபெற்ற சண்டி யாகம், பைரவர் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.