உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

Published On 2022-10-29 15:24 IST   |   Update On 2022-10-29 15:24:00 IST
  • கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு
  • நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விதமான மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், அரசின் மற்ற துறைகளின் நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளவும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திற னாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினர்.

இதில் ஒன்றிய துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் தகரகுப்பம் முனியம்மாள் பிச்சாண்டி, வெங்குப்பட்டு ராமன், புலிவலம் நதியாமதன்குமார், சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், விஏஓ ராஜகோபால், ஒன்றிய குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி மற்றும் சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News