உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு

Published On 2023-02-24 16:12 IST   |   Update On 2023-02-24 16:12:00 IST
  • புகை மண்டலமாக மாறியது
  • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சோளிங்கர்: 

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் மலைப்ப குதியில் தினசரி சேகரிக்கப்படும் 10 டன் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்றும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. குப்பைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்

Tags:    

Similar News