உள்ளூர் செய்திகள்

ரெயிலில் மயில் கடத்தல்

Published On 2023-09-11 15:57 IST   |   Update On 2023-09-11 15:57:00 IST
  • போலீசார் விசாரணை
  • தோகை முழுவதும் பிடுங்கப்பட்டிருந்தது

அரக்கோணம்:

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சென்னை-அரக்கோணம் முதலாவது நடைமேடை நுழைவாயிலில் ஆண் மயில் இறந்த நிலையில் கிடந்தது.

இதனை கண்ட பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் போலீசார் மயிலை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது மயிலின் தலையில் அடிபட்டிருந்தது. ேமலும் மயிலின் தோகை முழுவதும் பிடுங்கப்பட்டிருந்தது.

மயிலை ரெயிலில் கடத்தி வந்த அந்த நபர் மயிலின் தோகை முற்றிலும் எடுத்துக்கொண்டு ரெயிலில் வரும் போது போலீசாருக்கு பயந்து தூக்கி வீசி எரிந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

இறந்த மயிலை ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறையிடம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அரக்கோணம் ெரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News