உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2023-10-09 07:49 GMT   |   Update On 2023-10-09 07:49 GMT
  • வாலிபர் கைது
  • 32 கிலோ சிக்கியது

ராணிப்பேட்டை:

வாலாஜா போலீசார் ராமசாமி தெரு பகுதியில் கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 32 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து வாலாஜா போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மகேந்திரகுமார் (வயது 23) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News