உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2023-02-26 09:30 GMT   |   Update On 2023-02-26 09:30 GMT
  • மினிவேன் பறிமுதல்
  • ஜெயிலில் அடைப்பு

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வேட்டாங்குளம் ஊராட்சி சில்வர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் விஜய் (வயது 25).

இவர் அதே பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மினிவேனில் ஒரு யூனிட்மணல் கடத்தி சென்றார். அப்போது நெமிலி போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து மினிவேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News