உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் திருட்டு

Published On 2023-04-01 14:00 IST   |   Update On 2023-04-01 14:02:00 IST
  • கதவை உடைத்து துணிகரம்
  • போலீசார் விசாரணை

வாலாஜா:

வாலாஜா அடுத்த கோவிந்தராஜபுரம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கஜேந்திரன் (வயது 32). தலங்கை ரெயில் நிலையத்தில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது மனைவி, மகள்களுடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தூங்கி உள்ளார். காலையில் கீழே இறங்கி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது மேசை டிராயரில் அவர் வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மர்ம கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இது குறித்து வாலாஜா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News