உள்ளூர் செய்திகள்

மது அருந்தியவர்களிடம் ரூ.20 ஆயிரம், செல்போன் பறிப்பு

Published On 2023-10-25 07:55 GMT   |   Update On 2023-10-25 07:55 GMT
  • 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் கிராமம்,சிலோன் காலனி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரவிகுமார் (வயது42), மணிகண்டன்(40).

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு பள்ளேரி- வசூர் சாலையில் பொன்னை ஆற்று பாசன கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6பேர் கொண்ட கும்பல் ரவிக்குமார் மற்றும் மணிகண்டனை தாக்கிவிட்டு ரவிக்குமார் வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணம், மற்றும் 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதில் ரவிக்குமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ரவிக்குமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News