உள்ளூர் செய்திகள்

சோளிங்கரில் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம்

Published On 2022-10-10 15:24 IST   |   Update On 2022-10-10 15:24:00 IST
  • தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது
  • ஒன்றியக்குழு துணை தலைவர் பார்வையிட்டு ஆய்வு

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகு தியில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் 92 மில்லி மீட்டர் மழை பெய்ததால் சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தில் மஞ்ச கிணறு தெரு, பெருமாள் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் கழிவுநீர் கால்வாய் நிரம்பி வீட்டிற்குள் புகுந்தது . ஒன்றியக்குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன் சென்று பார்வையிட்டு கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு , தற்காலிகமாக மழை நீர் வீடுகளுக்கு செல்லாத வாறு தடுப்பு அமைக்கப்பட்டது .நேற்று 2 - வது நாளாக பலத்த மழை பெய்தது .

Tags:    

Similar News