உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அரக்கோணத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-06-12 14:10 IST   |   Update On 2022-06-12 14:10:00 IST
  • 100 பேருக்கு இயற்கை உர பை வழங்கப்பட்டது.
  • ஏராளமானோர் பங்கேற்பு

அரக்கோணம்:

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 'என் குப்பை என் பொறுப்பு' என்னும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகராட்சியில் தயாரிக்கப்பட்ட இயற்கை உர பை 100 பேருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, நகராட்சி ஆணையர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் நகரமன்ற துணைத்தலைவர் கலாவதி அன்புலா ரன்ஸ், நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் மற்றும் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News