உள்ளூர் செய்திகள்

மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-12-17 09:12 GMT   |   Update On 2022-12-17 09:12 GMT
  • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
  • மாணவிகள் கலந்து கொண்டனர்

சோளிங்கர்:

சோளிங்கரில் மின்சார துறை சார்பில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மின்சார உதவி செய்ய பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார். சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் இதில் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிக்கன வார குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் மின் சிக்கனம் குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மின்சிக்கன ஊர்வலத்தில் நகராட்சி துணைத் தலைவர் பழனி, உறுப்பினர்கள் அசோகன் அன்பரசு உள்பட நகராட்சி ஊழியர்களும் மின்சார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News