உள்ளூர் செய்திகள்

மாம்பாக்கம் பகுதிகளில் நாளை மின் வெட்டு

Published On 2022-10-17 10:08 GMT   |   Update On 2022-10-17 10:08 GMT
  • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
  • மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது

ஆற்காடு:

ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாம்பாக்கம் , குப்பிடி சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற் றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியா ளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News