அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் இரும்பு தடுப்புகளை அகற்றாத போலீசார்
- பயணிகள் கடும் அவதி
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரக்கோணம்:
வேலூரில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் வந்தார். அப்போது அரக்கோணம் ெரயில் நிலையத்தில் தொண்டர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரெயில் நிலையத்திற்குள் பாதுகாப்பிற்காக 30-க்கும் மேற்பட்ட இரும்பு தடுப்புகள் கொண்டு போலீசார் முதலாவது நடைமேடையில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.
தற்போது 4 நாட்கள் ஆகியும் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.
இந்த இரும்பு தடுப்புகள் சிதறி கிடக்கும் முதலாவது பிளாட்பாரம் சென்னையில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றன.
இப்பகுதியில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் பயணிகள் குறிப்பாக இரவு நேரங்களில், இரும்பு தடுப்புகளால் பிளாட்பாரத்தில் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பயணிகள் ரெயிலில் ஏறுவதற்கும் கடும் அவதி அடைகின்றனர்.
எனவே போலீசார் ஆங்காங்கே கிடக்கும் இரும்பு தடுப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.