உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

சோளிங்கரில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டி மனு

Published On 2022-06-09 15:40 IST   |   Update On 2022-06-09 15:42:00 IST
  • தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
  • மீட்டு பள்ளிக்கு வழங்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான 5.18 ஏக்கர்5.18 ஏக்கர் பரப்பளவு கொண்ட மந்த வெளி நிலத்தை அப்பகுதி அ.தி.மு.க.வை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

அதை மீட்டு பள்ளிக்கு வழங்கவும், அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்டகலெக் டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News