உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

Published On 2022-06-21 17:00 IST   |   Update On 2022-06-21 17:00:00 IST
  • 227 மனுக்கள் பெறப்பட்டது.
  • உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை குமரேஷ்வரன் தாங்கி, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெந்நார் கூட்டத்தில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மொத்தம் 227 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் சம்பந்தப் பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவி டப்பட்டது. கூட்டத்தில் துணை கலெக்டர்கள் சேகர், தாரகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News