உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ அலுவலகம் திறப்பு

Published On 2022-11-03 15:00 IST   |   Update On 2022-11-03 15:00:00 IST
  • பொதுமக்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள அழைப்பு
  • கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாட்கோ அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது.

தாட்கோ அலுவலகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மக்கள் பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரரின் புகைப்படம், சாதிச்சான்று. வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்), குடும்ப அட்டை, ஆதார் அட்டை விலைப்புள்ளி, திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் தாட்கோ இணையதளம் (ஆதிதிராவிடர்களுக்கு https://application.tahdco.com மற்றும் பழங்குடியினர்களுக்கு https://fast.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பம் செய்தோ அல்லது மாவட்ட மேலாளர் தாட்கோ அலுவலகத்தில் உரிய ஆவணகளுடன் நேரில் வந்து விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News