உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி முதியவர் பலி

Published On 2022-10-17 10:10 GMT   |   Update On 2022-10-17 10:12 GMT
  • தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை திருத்தணி - அரக்கோணம் ரெயில் பாதையின் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 57 வயது மதிக் கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது இறந்து கிடந்த வர் தணிகைபோளூர் பகுதியை சேர்ந்த சேகர் ( வயது 57 ) என்பதும், நேற்று காலை அந்த பகுதியில் சென்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Tags:    

Similar News