உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
- போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
- சிறையில் அடைத்தனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 74).
அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள் அப்போது சிறுமியிடம் கந்தசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ் பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கந்தசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.