உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கையேடு நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய போது எடுத்த படம்.

மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்

Published On 2022-06-28 15:45 IST   |   Update On 2022-06-28 15:45:00 IST
  • பெற்றோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • 100 பேர் பயனடைந்தனர்.

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் துளசிராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஸ்ரீ பிரபு அவரின் சார்பில் பள்ளியில் பயிலும் 100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் பள்ளிக்கு ஆர்.ஓ குடிநீர் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் டிஜிட்டல் கல்விமுறைக்கு புரொஜெக்டரை பள்ளிக்கு வழங்குவதாக தெரிவித்தார். அப்போது வார்டு உறுப்பினர் சுகந்தி சின்னத்தம்பி பள்ளி ஆசிரியர்கள் சுமதி அம்மாள், அனிதா மற்றும் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News