உள்ளூர் செய்திகள்

ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய தண்ணீர் தொட்டி

Published On 2023-02-11 15:11 IST   |   Update On 2023-02-11 15:11:00 IST
  • 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது
  • ஒன்றியகுழு தலைவர் வடிவேல் திறந்து வைத்தார்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி கிராமத்தில், ஊராட்சி ஒன்றியத்தின் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 18,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேநீர் தேக்கத்தொட்டியை ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதனால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News