உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சந்தித்த போது எடுத்த படம்.

32 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாணவர்கள் சந்திப்பு

Published On 2022-06-20 14:27 IST   |   Update On 2022-06-20 14:27:00 IST
  • நண்பர்களை பார்த்து கைகொடுத்து அன்பை வெளிப்படுத்தினர்.
  • நிலையான இடத்தில் இருப்பதற்கு ஆசிரியர்களே காரணம் என நெகிழ்ச்சி

அரக்கோணம்:

அரக்கோணம் சிஎஸ்ஐ,தூய அந்திரேயர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 89-92 ஆம் ஆண்டு படித்த பள்ளி மாணவ மாணவிகள் முனீர் அஹமத், செழியன், ராஜேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 32 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பில் பிரிந்து சென்ற மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்கள் பள்ளி அனுபவங்களையும் ஆசிரியர்களின் பெருமைகளையும் பாராட்டி பள்ளி பருவ கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் மூலம் 32 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தனது நண்பர்களை பார்த்து கைகொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினர்.

பழைய ஆசிரிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களின் பெருமைகளை பாராட்டி தன் வாழ்நாளில் தாங்கள் ஒரு நிலையான இடத்தில் இருப்பதற்கு ஆசிரியர்களே காரணம் என நெகிழ்ந்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News