உள்ளூர் செய்திகள்

மேல்பாக்கம் ரெயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி

Published On 2023-10-25 07:59 GMT   |   Update On 2023-10-25 07:59 GMT
  • மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டுகோள்
  • ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை

அரக்கோணம்:

அரக்கோணம் - ஓச்சேரி பிரதான சாலையில் மேல்பாக்கம் பகுதியில் உள்ள அரக்கோணம் - காஞ்சீபுரம் ரெயில் மார்கத்தின் ரெயில்வே கேட் பகுதியில் இன்று (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே, அத்தியாவசிய தேவைக்கு பொது மக்கள் மற்றும் வாகனங் களில் செல்வோர் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களின் இரவில் ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்த்து பருத் திபுத்தூர் வழியாககும்பினிபேட்டை செல்லும் சாலையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரக்கோணம் தாசில் தார் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News