உள்ளூர் செய்திகள்

பெண்ணை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி கைது

Published On 2023-05-26 09:45 GMT   |   Update On 2023-05-26 09:45 GMT
  • 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
  • போலீசார் விசராணை

ராணிப்பேட்டை,

ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது பெண். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த பெண்ணுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த ஏத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(28) கூலி தொழிலாளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

அங்கு வந்த வேல்முருகன் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதில் அந்த பெண் தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அவர் வேல்முருகனை நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

இதற்கு வேல்முருகன் எனக்கும் இந்த கர்ப்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி திருமண செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News