உள்ளூர் செய்திகள்

மழைக்கால நடவடிக்கைகள் தீவிரம்

Published On 2023-12-04 07:04 GMT   |   Update On 2023-12-04 07:04 GMT
  • அதிகாரி நேரில் ஆய்வு
  • தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது

ராணிப்பேட்டை:

காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட உத்தரம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு இருளர் இன மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் பாலச்சந்தர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையப்புதீன், வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கிராம நிர்வாக அலுவலர் பூபாலன், ஊராட்சி செயலாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News