உள்ளூர் செய்திகள்
- உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் நகர காங்கிரஸ் சார்பில் ,மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம்.கே.பாஸ்கர் கலந்து கொண்டு இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சங்கர்,வாலாஜா ஒன்றிய தலைவர் வி.சி. மோட்டூர். கணேசன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.