நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசிய காட்சி.
"கைத்தறி ஆடைகளை அணிந்து வளர்ந்தவன் நான்"
- 8-வது தேசிய கைத்தறி தின விழாவில் கலெக்டர் பெருமிதம்
- முத்ரா திட்டத்தில் ரூ.15.40 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த குருராஜப்பேட்டையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க சார்பாக 8-வது கைத்தறி தின விழா நடைபெற்றது.
இதில் வேலூர் சரக துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் அகமது பாஷா தலைமை வகித்தார். அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் முன்னிைல வகித்தார்.
கோ அப்டேட்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் கீதா தமிழ்மணி வரவேற்றார்.
விழாவில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெசவாளருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் தல 50,000 வீதம் சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காண கடன் உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்:-
கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்தும் முறையை வளர்க்க வேண்டும் நிகழ்ச்சிகளில் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான கைத்தறி துணிகளை கொடுத்து வரவேற்கும் கலாச்சாரத்தை நாம் பழக்க வேண்டும் வெளிநாட்டு பொருட்களை துணிகளை வாங்குவது தவிர்க்க வேண்டும் நெசவாளர்களுக்கு தேவையான அனைத்து கடன் உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெசவாளர்கள் நிறைந்த மாவட்டம் பனப்பாக்கம் நிகழ்ச்சி நடக்கும் இந்த குருராஜப்பேட்டை போன்ற பகுதிகளில் கைத்தறி துணி என்பது பல காலங்களமாக மிகவும் பிரபலமானது பண்டிகை காலங்களில் என்னுடைய தகப்பனார் பணப்பாக்கம் பகுதிசென்று கைத்தறி துணிகளை தேடி வாங்கி வந்து எங்களுக்கு உடுத்துவார்.
கைத்தறி ஆடைகளை அணிந்து வளர்ந்தவன் நான் இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து இலவச மருத்துவ முகாமை அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிடியோ வெங்கடேசன் மாவட்ட கவுன்சிலர் அம்பிகா ஒன்றி கவுன்சிலர் பாலன் ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் குப்புசாமி தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.