உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் பட்டதாரி பெண் மயங்கி விழுந்து சாவு

Published On 2022-07-23 15:05 IST   |   Update On 2022-07-23 15:05:00 IST
  • முதலுதவி சிகிச்சை அளித்தும் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் . அவரது மகள் சந்தியா ( வயது 29 ) . பட்டதாரியான இவர் காஞ் சீபுரத்தில் தங்கி டி.என்.பி. எஸ்.சி. தேர்வுக்காக படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சந்தியா தர்மபுரிக்கு செல்வதற் காக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். நடை மேடைக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது திடீ ரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்ட நிலையில் சந்தியா பரி தாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News