உள்ளூர் செய்திகள்

பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளங்கள்

Published On 2023-05-12 12:42 IST   |   Update On 2023-05-12 12:42:00 IST
  • கண்காணிப்பு தீவிரம்
  • தாசில்தார் உத்தரவின் பேரில் நடவடிக்கை

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக வரு வாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்ப டையில் தாசில்தார் வசந்தி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் தணிகாசலம், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ் வரி மற்றும் வருவாய்த்துறையினர் மணல் கடத்தலை தடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் புதுப்பாடி பாலாற்று பகுதியில் ராட்சத பள்ளங்கள் எடுத்து மணல் கடத்தலை தடுக்க நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் இதையும் மீறி யாராவது பாலாற்றில் மணல் கடத் துகிறார்களா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News