உள்ளூர் செய்திகள்

பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது

Published On 2023-10-30 09:45 GMT   |   Update On 2023-10-30 09:45 GMT
  • போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
  • பைக் பறிமுதல்

கலவை:

ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாலாஜா அணைக்கட்டு ரோட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 37) என்பதும், பைக்கில் 2கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து கலால் போலீசார் ராஜேஷை கைது செய்து, 2கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ. 20ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News