உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 46 இடங்களில் தீ விபத்து
- தீபாவளி பட்டாசு வெடித்த போது விபரீதம்
- 146 பேர் காயம்
ராணிப்பேட்டை:
வேலூர் தீயணைப்பு மண்டலத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
இந்த 7 மாவட்டங்களில் விபத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எந்த வகையிலும் விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாட வேண்டுமென அறிவுறுத்தினர்.
இந்த 7 மாவட்டங்களில் நேற்று தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது 46 இடங்களில் லேசான தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.இதில் 146 பேர் காயமடைந்தனர்.அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.