உள்ளூர் செய்திகள்

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா

Published On 2022-08-09 08:55 GMT   |   Update On 2022-08-09 08:55 GMT
  • பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
  • 50-க்கும் மேற்பட்டோர் தீமித்து நேர்த்திகடன் செலுத்தினர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த திடீர் நகர் பகுதியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும்.இந்நிலையில் ஆடிமாத தீமிதி திருவிழா கடந்த 5 ம் தேதி தொடங்கியது.இதனையடுத்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

மேலும் பக்தர்கள் கூழ் வார்த்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது.இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

ஏராளமான அக்கம் பக்கத்து கிராம மக்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை பாரதிமணி, தம்பா, கன்னியப்பன், ஜெயபால் உள்ளிட்டோர் செய்தனர்.

Tags:    

Similar News