உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா
- பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
- 50-க்கும் மேற்பட்டோர் தீமித்து நேர்த்திகடன் செலுத்தினர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த திடீர் நகர் பகுதியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும்.இந்நிலையில் ஆடிமாத தீமிதி திருவிழா கடந்த 5 ம் தேதி தொடங்கியது.இதனையடுத்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
மேலும் பக்தர்கள் கூழ் வார்த்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது.இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஏராளமான அக்கம் பக்கத்து கிராம மக்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை பாரதிமணி, தம்பா, கன்னியப்பன், ஜெயபால் உள்ளிட்டோர் செய்தனர்.