உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

2 குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை

Published On 2022-06-17 15:04 IST   |   Update On 2022-06-17 15:04:00 IST
  • வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்
  • போலீசார் விசாரணை.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த கணப திபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜியின் மகன் புண்ணியகோட்டி (வயது 40). இவருக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக புண்ணியகோட்டி மனநலம் பாதிக் கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த தாகக் கூறப்படுகிறது. கடந்த 15-ந்தேதி புண்ணியகோட்டி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் பரவி எரிந்த தீயால் பலத்த தீக்காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு புண்ணிய கோட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News